
நாம் எமக்குள் இரக்கம் காட்டும் விசயத்தில் அதிகம் கவனம் எடுப்பது குறைவு. எம்மைச் சுற்றி நடக்கு அனைத்து அனியாயங்களுக்கும் இரக்கத் தன்மை இன்றி நாம் நடந்துகொள்வதுதான் பிரதானமான காரணம். நம்பில் ஒரு சிலர் தங்களுடைய குழந்தைகளை உயர்வாக மற்றவர்கள் கருத வேண்டும் என்ற உள் நோக்குடன் வேறு குழந்தைகளை இழிவு படுத்தியும் வெளிப்படையாக பேசுவதை கண்டுள்ளோம். உன்மையில் இது இறைவனால் வெறுக்கத்தக்க செயல் என்பதை அவர்கள் உணரவேண்டும். அத்துடன் பிறர் பிள்ளையை ஊட்டி வளர்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்ற என்னம் எமக்குள் விதைக்கப்படவேண்டும்.
நம்மில் பலருக்கு கொடுத்தால் குறைந்துவிடும் என்ற ஒரு வீண் பயம் அவர்களை ஆட்டிபடைப்பதுவும் உண்டு. அதனால்தான் ஒரு சில பெண்கள் கனவனின் பெற்றோர்களுக்குகூட தன் கனவனின் உழைப்பிலுருந்து கொடுப்படிதில் கஞஞத்தனம் காட்டுகின்றனர். தன் பெற்றோறைப் பார்பதுபோல் கனவனின் தாய் தந்தையை கவனிப்பதற்கு பின் நிற்கின்றனர். இதற்கு காரணம் இரக்கத்தனமை இல்லாமையே.
ரஸூல் (ஸல்) அவர்களிடம் "மக்களை அதிகமாக சுவனத்தில் நுழைவிக்கின்ற விடயம் எது என்று கேட்கப் பட்டது. அதற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் தக்வாவும் நற் பண்புகளுமாகும்" என்றார்கள். (திர்மிதி)
எமக்கு நற் பண்பும் தக்வாவும் இருக்கின்றனவா என்று எம்மை நாம் கேள்வி கேட்டால் என்ன நடக்கும். ஒரு சிலர் கேட்காமலே விட்டு விடுவோம் "கேட்டால்தானே பிரச்சினை". ஒரு தக்வா உள்ள மனிதனாக மாறுவதற்கு எமக்குள் அளவுகடந்த ஆசை இருந்தும், அதக்கான முயற்சி எடுப்பதில்தான் பின்னுக்கு நிற்கிறோம். இதற்கு காரணம் எமது மன இச்சைக்கு நாம் நடிமைப்பட்டு விடுவதனால்தான்.
எந்தவொரு சிறிய நன்மையையும் இழிவாகக் கருதி விடாதீர்கள். ஒரு சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகைப்பதும் ஸதகாவாகும். இந்த உலகத்தில் கஸ்டம் இல்லாமல் எவரும் இல்லை. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவிதமான கவலைகளுடனும் கஸ்டத்துடனும்தான் வாழ்கிறான். என்ன கஸ்டம், அல்லது மகிழ்ச்சி வந்தாலும், ஒரு சில மணி நிமிடங்கள்தான், அதுவும் எம்மை கடந்துவிடும் என்ற உள் உணர்வு எமக்கு பலமாக இருக்க வேண்டும், அப்போதுதான் நாங்கள் மற்றவர்களின் மனம் புன்படாதவாறு பழக கற்றுக்கொள்ளலாம்.
0 comments:
Post a Comment