Friday, October 1, 2010
மற்றவர்களை குறை காணுதல்
Saturday, July 10, 2010
குழந்தை வளர்ப்பு
கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக நல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளை நல்ல படியாக வளர்க்க முடியும். சில வீடுகளில் ஆடு பகை குட்டி உறவு என்ற ரீதியில் இருப்பார்கள்.
கணவன் மனைவிக்கு இடையே பெரும் மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும் தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும், அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில் பெருமை.
சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயே மனைவியை திட்டுவது, அடிப்பது, சண்டையிடுவது ஆகியவற்றை செய்வார்கள். மிக கீழ்த்தரமான வார்த்தைகளையும் சிலர் ப்ரயோகிப்பார்கள். இது பிள்ளையின் மனதில் தாயின் மரியாதையை குறைத்து விடும்.
மேலும் ஒரு படி மேலே போய் சில தகப்பன்கள் பிள்ளைகளை ஒற்றனைப் போல் வைத்திருப்பார்கள். அதாவது,” நான் இல்லாத போது அம்மா என்ன செய்யறான்னு” எனக்கு சொல்லணும். சொன்னாநான் சாக்லேட் வாங்கித் தருவேன். என்று சொல்வார்கள். இது மிக மிகத் தவறு. இப்படி பட்ட மனநிலையில் வரும் பிள்ளையின் எதிர் காலம் என்னவாகும்.
மனைவியும் சில தவறுகளைச் செய்கிறாள். பிள்ளையின் மீது இருக்கும் பாசத்தினால் சில சமயங்களில் பிள்ளையை காக்க தகப்பனிடம் சில விடயங்களை சொல்லாமல் இருந்து விடுவாள்.
”அம்மாவுக்குத் தெரியும். அம்மா திட்ட மாட்டாங்க. அப்பா கிட்ட சொன்னா தோல உரிச்சிடுவாருன்னுஅம்மா அப்பா கிட்டயும் சொல்ல மாட்டாங்கன்னு” சொல்லும் பிள்ளை நல்லதாக வளர்க்கப்பட்ட பிள்ளையல்ல”.
சில பெண்கள் பிள்ளையிடன் கடைக்குச் செல்லும் போது, கணவன் திட்டுவார் என்று தெரிந்தும் ஒரு பொருள் தான் ஆசைப் பட்டதை வாங்கியிருப்பார். பிள்ளை போய் போட்டுகொடுத்துவிட்டால்!! “இந்தா இந்த சாக்லேட் வெச்சுக்கோ. அப்பா கிட்ட இதெல்லாம் சொல்லக்கூடாது!” என்று சொன்னால் நாளை அந்தக் குழந்தை நீ செஞ்சதை நான் சொல்லவில்லை, நான் செய்வதை நீயும் சொல்லாதே” என்று பிளாக் மெயில் செய்ய ஏதுவாகும்.
மற்ற விடயத்தில் எப்படியோ? கணவன் மனைவி இருவரும் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் ஒத்த கருத்து உடையவர்களாக இருந்தால் தான் வளரும் தலைமுறை நல்ல குடிமகன்களாக, அன்னை தந்தையின் பால் மரியாதை, பாசம் கொண்ட தலைமுறையாக உருவாகும்.
உனக்கு அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா என்கின்ற கேள்வியே தவறு. அம்மா, அப்பா இல்லாமல்பிள்ளை இல்லை. ஆகவே இருவரும் ஒன்று எனும் எண்ணம் பிள்ளைக்கு வரவேண்டும்.
அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவிடம் பர்மிஷன் வாங்கிக்கொள்ளலாம் என்றோ அப்பாவுக்கு தெரியாமல்அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிடலாம் என்றோ குழந்தை நடந்துகொள்கிறது என்றால் இருவரும்சேர்ந்து சரியாக வளர்க்க வில்லை என்பது தான் பொருள்.
Friday, March 26, 2010
உங்களில் சிறந்தவர் யார்?
Sunday, February 7, 2010
மற்றவர்கள் மீது இரக்கம் காட்டுங்கள்
நாம் எமக்குள் இரக்கம் காட்டும் விசயத்தில் அதிகம் கவனம் எடுப்பது குறைவு. எம்மைச் சுற்றி நடக்கு அனைத்து அனியாயங்களுக்கும் இரக்கத் தன்மை இன்றி நாம் நடந்துகொள்வதுதான் பிரதானமான காரணம். நம்பில் ஒரு சிலர் தங்களுடைய குழந்தைகளை உயர்வாக மற்றவர்கள் கருத வேண்டும் என்ற உள் நோக்குடன் வேறு குழந்தைகளை இழிவு படுத்தியும் வெளிப்படையாக பேசுவதை கண்டுள்ளோம். உன்மையில் இது இறைவனால் வெறுக்கத்தக்க செயல் என்பதை அவர்கள் உணரவேண்டும். அத்துடன் பிறர் பிள்ளையை ஊட்டி வளர்தால் தன் பிள்ளை தானாய் வளரும் என்ற என்னம் எமக்குள் விதைக்கப்படவேண்டும்.
நம்மில் பலருக்கு கொடுத்தால் குறைந்துவிடும் என்ற ஒரு வீண் பயம் அவர்களை ஆட்டிபடைப்பதுவும் உண்டு. அதனால்தான் ஒரு சில பெண்கள் கனவனின் பெற்றோர்களுக்குகூட தன் கனவனின் உழைப்பிலுருந்து கொடுப்படிதில் கஞஞத்தனம் காட்டுகின்றனர். தன் பெற்றோறைப் பார்பதுபோல் கனவனின் தாய் தந்தையை கவனிப்பதற்கு பின் நிற்கின்றனர். இதற்கு காரணம் இரக்கத்தனமை இல்லாமையே.
ரஸூல் (ஸல்) அவர்களிடம் "மக்களை அதிகமாக சுவனத்தில் நுழைவிக்கின்ற விடயம் எது என்று கேட்கப் பட்டது. அதற்கு ரஸூல் (ஸல்) அவர்கள் தக்வாவும் நற் பண்புகளுமாகும்" என்றார்கள். (திர்மிதி)
எமக்கு நற் பண்பும் தக்வாவும் இருக்கின்றனவா என்று எம்மை நாம் கேள்வி கேட்டால் என்ன நடக்கும். ஒரு சிலர் கேட்காமலே விட்டு விடுவோம் "கேட்டால்தானே பிரச்சினை". ஒரு தக்வா உள்ள மனிதனாக மாறுவதற்கு எமக்குள் அளவுகடந்த ஆசை இருந்தும், அதக்கான முயற்சி எடுப்பதில்தான் பின்னுக்கு நிற்கிறோம். இதற்கு காரணம் எமது மன இச்சைக்கு நாம் நடிமைப்பட்டு விடுவதனால்தான்.
எந்தவொரு சிறிய நன்மையையும் இழிவாகக் கருதி விடாதீர்கள். ஒரு சகோதரனின் முகத்தைப் பார்த்து புன்னகைப்பதும் ஸதகாவாகும். இந்த உலகத்தில் கஸ்டம் இல்லாமல் எவரும் இல்லை. ஒவ்வொருவருக்கும், ஒவ்வொருவிதமான கவலைகளுடனும் கஸ்டத்துடனும்தான் வாழ்கிறான். என்ன கஸ்டம், அல்லது மகிழ்ச்சி வந்தாலும், ஒரு சில மணி நிமிடங்கள்தான், அதுவும் எம்மை கடந்துவிடும் என்ற உள் உணர்வு எமக்கு பலமாக இருக்க வேண்டும், அப்போதுதான் நாங்கள் மற்றவர்களின் மனம் புன்படாதவாறு பழக கற்றுக்கொள்ளலாம்.
Saturday, January 23, 2010
நிம்மதி-ஒரு பார்வை
மகிழ்ச்சி நம்மை விட்டு தூர விலகி நிற்கும் சமயத்தில் மட்டும் அதன் மதிப்பை நாம் ஏன் உணர முற்படுகிறௌம்...?
கடந்த கால வாழ்க்கையை நினைத்து விசனப்படுவதும், புலம்புவதும், மேலும் அதிக விருப்பங் கொள்வதுமாக உள்ள நாம் அனைவருமே நம்முடைய நிகழ்கால வாழ்க்கை இன்னும் சிறிது காலத்தில் கடந்த காலமாக மாறப்போவதைப் பற்றி ஏன் சிந்திப்பதில்லை...?
சலிப்போ-களிப்போ எதுவானாலும் அதற்கு நம் நினைப்புத்தான் காரணமாகும். நம்மைப்பற்றியே நாம் கவலைப்படத் துவங்கினால் உலகத்திலே அதிக துன்பமுள்ள மனிதன் நாம் தான் என்று நமக்குத் தோன்றும். ஆனால் தன்னைப் பற்றியே யோசிக்கிற அந்த மனோபாவம்தான் மகிழ்ச்சியான நேரத்தில் தன்னைப் போல கொடுத்து வைத்தவன் யாருமில்லை என்று நினைக்க வைக்கும்.
வாழ்க்கையில் நாம் நிம்மதியாக இருக்க சில பழக்கங்களை கைகொள்ள வேண்டும். நாம் ஓர் உருப்படியான காரியம் செய்து அதற்கு தானாக பாராட்டு கிடைத்தால் அது தன்னை ஊக்கப்படுத்துவதற்கு உதவியாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். அதே சமயம் நாம் எதிர்பார்த்தபடி யாரும் பாராட்டா விட்டால் அதற்காக அலட்டிக் கொள்ளாமல் பாராட்டத் தேவையான திறனாய்வு அவர்களிடம் இல்லை என்று அமைதியாக இருக்கப்பழக வேண்டும். நம்மை மற்றவர்கள் மதிக்க வேண்டும் என்பதை எதிர் பார்க்கக்கூடாது. அதே சமயம் நமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்வதில் நாம் அக்கறையோடு இருக்க வேண்டும்.
சில சந்தர்ப்பங்களில் நாம் ஒதுங்கியிருப்பதே நம் மரியாதையை காப்பாற்றுவதாக இருக்கும். அதற்கு இணங்கவும் மனம் குறைபடாமல் ஒதுங்கியிருக்க பழகிக்கொள்ள வேண்டும். தேவைகளை பூர்த்தி செய்து மனநிறைவை அடைய வேண்டும் என்பதை விட தேவைகளை குறைத்துக் கொண்டு மன நிறைவை அடைய பழகிக் கொள்ள வேண்டும். இதுவெல்லாம் நாம் எப்போதும் நிம்மதியாயிருக்க கைக்கொள்ள வேண்டியவை.