ஒரு முறை நபி ஸல்லள்ளாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தன்னைச் சூழ்ந்திருந்த ஸஹாபாக்களை நோக்கி,"உங்களில் சிறந்தவர் யார் என்று தெரியுமா?" என வினவியபோது, ஸஹாபாக்கள் அள்ளாஹ்வும் அவனுடைய திருத் துதருமே அறிவார்கள் எனப்பதிலளித்தனர். அதற்கு, நபி (ஸல்)அவர்கள் "அல்_குர்ஆனை தானும் கற்றுப் பிறருக்கும் கற்றுக்கொடுப்பவரே உங்களில் சிறந்தவர்" என அழகிய திருவாய் திறந்து நவின்றுள்ளார்கள்.
எனவே நபி(ஸல்)அவர்கள் இவ்வார்த்தையை நவின்றதன் காரணம்; அல்_குர் ஆனது,ம னித வாழ்வின் கட்டவிழாத பொக்கிஷமாகத் திகழ்ந்து இஸ்லாமிய வாழ்க்கை முன்னோடியாகப் பரிணமிக்கின்றது என்றால் மிகையாகாது. அல்_குர்ஆன்; மனிதனைப் படைத்த இறைவனைப் பற்றி அறிமுகப் படுத்தியது மட்டுமல்லாது, அவனது தூதருக்கும் வழிப்படுமாறும் ஏவுகிறது ஏன்?... மனிதனை உயர்ந்த வழியில் இட்டுச் செல்ல,வாழ்க்கையின் அனைத்து விடயங்களையும் தன்னகத்தே அடக்கி வைத்துள்ளது.(வாழ்க்கைமுறை,திருமணம்,தலாக்,இத்தா,ஒழுக்கமுறை,வெற்றியின் வளி,நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல்,.....), மற்றும் பல்துறை அறிவான(விவசாயம்,புவியியல்,வானவியல், சாஸ்திரவியல்)போன்ற இனோரன்ன அறிவுப்பொக்கிஷங்களும் செரிந்து காணப்பட்டதால் தான் இன்றைய பல்துறைகளனணத்தும் அல்-குர்ஆனை முன்னோடியாக வைத்து விண்னணத் தொடுமளவிற்கு முன்னேறிச் சென்றுள்ளமை காணமுடிகிறது.
மற்றும் பல் துறைசார்ந்த அண்ணியர்கள் தங்கள் ஈடுபாடுகளை அல்-குர்ஆன் கூறிய மையக் கருத்தை வைத்து ஆழ்ந்தது செயற்பட்டபோது இஸ்லாமிய மார்க்கமே உண்மையானது என்று பலரும் உடனுக்குடன் இஸ்லாத்தைத் தழுவியது, தம் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஏடாக அமைந்துள்ளது என்றால் ஏன்? எம் முஸ்லிம் சமுதாயம் அல்-குர் ஆனை சிறந்த முறையில் கற்பதனை அசிரத்தையோடு ஈடுபடுகின்றது. இதற்குக் காரணம், தம் பெற்றோர்களிடம் மார்க்க அறிவும் அதன் ஆளமும் மிகக் குறைவானதே எனலாம்.மேலும் பெரியவர்கள் தெரியாத விடயங்களை கற்றுக்கொள்வோம் என்ற
ஆர்வமின்மையும் ,தாழ்வுச்சிக்கலுமே முதற்காரணம்.
ஆம் பிற்பட்ட காலப் பகுதியில் எழுத்தறிவு ஏற்பட்ட அரபு சமுதாயத்தை ஓர் கணம் எட்டிப் பார்த்தால்; அவர்கள் மிகவும் குறுகிய காலப் பகுதியில் கல்வி வளர்ச்சியடைந்துள்ளார்கள். மேலும் எழுதப் படிக்கத்தெரியாத வயது முதிர்ந்த பெற்றோர்கள் கூட தான் கல்வி என்னும் மகுடத்தை எம்மில் சூட்டினால்தான் தாம் குர்ஆனை விளங்கி சிறந்த சமுதாயத்தை உருவாக்கி எம் இம்மை மறுமை வாழ்க்கையை சீருடன் அமைக்க முடியும் என்று கருதி தன் பச்சிளங் குழந்தைகளை பராமரிப்பில் விட்டு விட்டு கல்வி கற்று அல்-குர் ஆனை விளங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஏன் அவர்களுக்கு இருக்கும் ஆர்வம் எம் பெர்றோர்களுக்கு இல்லாததோடு, தம் இளம் பராயத்தினரையும் ஊக்கு விக்கத் தவறுகின்றனர். இவர்கள் தாம்; உலக வாழ்க்கைக்கு அடிமையாகி அதில்
விலைபோகின்றனர்.இனியாவது எம் முஸ்லிம் சமூகம் சீர் பெற்று எழும்ப இறைவன் அருள் புரிவானாக!......ஆமீன்.
0 comments:
Post a Comment